Wednesday, August 20, 2008

நாடகம்

கம்பஸில தமிழ் program ஏதாவது நடந்தா, கட்டாயம் ஒரு நாடகமாவது போடுவாங்கள். நாடகம் நடக்கேக்க பார்க்கிற ஆட்களுக்கு ந‌டுவில‌ இருந்து சில பேர் கத்தி comments அடிப்பாங்கள். நாடகங்களில வாற jokes ஐ விட சிலநேரம் கீழை இருந்து கத்திற‌ comments உம் jokes உம் நல்லா இருக்கும்.
அப்பிடி comments அடிக்கிற ஆட்களில முக்கியமான ஆள் .......குமரன். அவன் பின்வரிசையில இருந்து கத்திறது, முன் வரிசையில இருக்கிற ஆக்களுக்கு மட்டுமில்ல நடிக்கிறவைக்கும் வடிவா கேக்கும். ஒருக்கா, எங்கட batch நாடகம் போடேக்க, குமரனை பின்னால விட்டாதானே பிரச்சினை, அவனுக்கும் சின்னதா ஒரு வேடம் குடுப்பம் எண்டு தீர்மானிச்சு, வந்திற்று போறமாதிரி ஒரு சின்ன role ஒண்டு குடுத்தம். நடிச்சு பழகேக்க எல்லாம் ஒழுங்கா வந்த குமரன், நாடகம் போடுற அண்டைக்கு "Tensionஆ இருக்கு மச்சான் இப்பிடியே நாடகம் நடிக்கேலாது" எண்டு சொல்லிபோட்டு, கடைக்குப்போய் ரெண்டு beer போத்திலை வாங்கி, ஒரு bagகுக்க போட்டுக்கொண்டு வந்திற்றான். என்ன மச்சான் இது எண்டு கேட்டதுக்கு "இதைக்குடிச்சாத்தான் Tension இல்லாம நடிக்காலாம்" எண்டு சொன்னான். இப்ப tension, நாடக தயாரிப்பாளருக்கும் தொத்திற்றுது. குடிச்சுப்போட்டு வந்து நாடகத்துக்கு நடுவில என்ன கூத்து காட்டபோறானோ எண்டு பயம் பிடிச்சிட்டுது. தான் சொன்னா குமரன் கேட்டமாட்டான் எண்டிற்று, நாடக தயாரிப்பாளர் ஒரு final year படிக்கிற சீனியரிட்ட போய், நாடகம் முடியும் மட்டுமாவது குமரனை குடிக்கவேண்டாம் எண்டு சொல்லுங்கோ எண்டு கேட்டான். ஆனா சீனியர், போத்திலையும் கொண்டுவா எண்டு குமரனை மேடைக்கு பின்னால கூட்டிக்கொண்டுபோய், ரெண்டுபேருமா சேர்ந்து ரெண்டு போத்தலையும் குடிச்சு முடிச்சுட்டு வந்திற்றினம். தானும் சேர்ந்து குடித்ததும் இல்லாம, குமரன் ஸ்ரெடியாத்தான் இருக்கிறான் வடிவா நடிப்பான் ஒண்டுக்கும் யோசிக்கா வேண்டாம் எண்டு தயாரிப்பாளருக்கு அட்வைஸ் வேற.


நாடகம் தொடங்கீற்றுது. குமரனுக்கு காவலாளி வேடம். அரசர் சபைக்கு வருகிறார். உடன குமரன் "அரசர் சபைக்கு வருகிறார். பராக் பராக் பராக்" எண்டு வடிவா நாடக வசனத்தை பேசிற்று, ஆடாம அசையாம கையில ஈட்டியோட நிண்டான். கீழ இருந்து விசில் சத்தம் பறக்குது. யாரோ ஒருத்தன் கத்தினான் "குமரா நல்லா நடிக்கிறாய்" எண்டு.
அந்த காட்சி முடிஞ்சு, குமரன் மேடையை விட்டு இறங்கின பிற‌குதான், தயாரிப்பாளருக்கு போன நிம்மதி திரும்பி வந்திது.


வேற ஒருத்தரும் கிடைக்காட்டி, என்னையும் இடைக்கிடை நடிக்க கூப்பிடுவாங்கள். ஒருக்கா இப்படித்தான் நான் ....ராஜனின்ர நாடகத்தில நடிச்சனான். நாடகம் நடந்துகொண்டிருக்கேக்க, ராஜன் நாடக வசனம் எழுதின பேப்பர்களோட மேடைக்கு பக்கத்தில நடிக்கிறவைக்கு மட்டும் தெரியிறமாதிரி நிண்டான். நடிக்கிறவை வசனத்தை மறந்து போச்சினமெண்டா, மெல்லமா சொல்லிகுடுக்க இந்த ஏற்பாடு.
நாடகத்தின்ர உச்சக்கட்டம், கிளைமைக்ஸ் சீன். நான் சிவாஜிகணேசன் மாதிரி, சோகமா நீண்ட வசனம் பேசவேணும். நானும் என்னால முடிஞ்சமட்டும் முகத்த சோகமா வ‌ச்சுக்கொண்டு வ‌ச‌ன‌ம் பேசிக்கொண்டு இருந்த‌ன். ஆனா ராஜ‌ன், "க‌ணேஷ் சோக‌ம், சோச‌ம், சோக‌ம் ப‌த்தாது" எண்டு சொல்லிக்கொண்டேயிருந்தான். இதுக்குமேல‌ சோக‌மெண்டா நான் அழ‌த்தான் வேணும். நானும் கஸ்ரப்பட்டு இன்னும் சோக‌த்தை கூட்ட‌ப்போய் எல்லாம் குழம்பி, இருந்த‌ சோக‌மும் இல்லாம‌ப்போச்சு. ஒருமாதிரி எல்லா வ‌ச‌ன‌த்தையும் சொல்லி முடிச்சிற்ர‌ன். நாட‌க‌ம் முடிய‌ பெடிய‌ள் சொன்னாங்க‌ள். "ந‌ல்லா ந‌டிச்சா ம‌ச்சான், அதுவும் க‌‌டைசி சீன் ப‌கிடியா சூப்ப‌ரா இருந்திது " எண்டாங்க‌ள். அதுக்கு பிற‌கு ராஜ‌ன் என்னை நாட‌க‌ம் ந‌டிக்க‌ கூப்பிடுற‌தேயில்லை.

1 comment:

எஸ் சக்திவேல் said...

கடைசியாக எழுதியதற்குப் பின் ஒரு "சின்ன" இடைவெளி. ஏங்கே போய் விட்டாய் த்லைவா?