Saturday, December 10, 2011

ஒரு அகதியின் டயரி - 8 - மீண்டும் ஊருக்கு

வெளிநாட்டுக்கு போறவைக்கு ஏஜென்சிகாரர்தான்  கடவுள்.  காசையும் குடுத்திற்று, வாரவாரம் அவையின்ர ஆபீஸ்க்கு வேற அலைய வேணும். அப்பத்தான் சாமி வரம் குடுக்கிற மாதிரி, எஜின்சி  காரரின்ர மனம் இளகி,  ஒருமாதிரியா  வெளிநாட்டுக்கு அனுப்புவாங்கள். ஆனால் காரனுக்கு எல்லாமே கடகடவெண்டு நடந்தது. காசை கட்டி ஒரு மாதத்தில, பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்து தாய்லாந்துக்கு அனுப்பி வைச்சான்கள்.
நானும் கொழும்புவரைக்கும் வழி அனுப்ப போனன்.

கடைசி நேரத்திலும் எனக்கு  ஏஜென்சி காரனில நம்பிக்கை இல்லை.

 "என்ன மச்சான் லண்டனுக்கு அனுப்பிறன் எண்டுபோட்டு பாங்காக்க்கு அனுப்புறாங்கள். எப்பிடி லண்டனுக்கு அனுப்பபோறங்கள் எண்டு விசாரிச்சனியா ?  " எண்டன்.

 "உதெல்லாம் ஏஜென்சி ரகசியம். கேட்டாலும் சொல்ல மாட்டாங்கள். இப்ப தாய்லாந்துக்கு போறன். கெதியா  எப்பிடி எண்டாலும் லண்டனுக்கு அனுப்புவான் எண்டு நம்பிக்கை இருக்கு. "

வெளிக்கேட  முதல், "மச்சான்,  இந்த நாட்டில மனிசருக்கு மரியாதை இல்லை. ஆயுதங்களுக்குதான் மரியாதை. நீயும் கெதியா வெளியில போற வழியை பார்" எண்டு எனக்கும் வெளிநாட்டு ஆசையை சாடையா கிளறி விட்டிட்டு போனான்.

   திரும்பி காலிக்கு போகேக்க , ஒரே யோசனை. வெளிநாட்டுக்கு போறதை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியேல்ல. என்ர வாழ்க்கையும் காற்று அடிக்க பறக்கிற சருகு போல, நாட்டு பிரச்சினையால அல்லாடினாலும், என்ர நினைப்பு ஊரையே சுற்றி சுற்றி வந்ததாலே வெளிநாட்டை பற்றி யோசிக்கவே முடியேல்ல.
     கொஞ்ச நாளில, JR  இன்ர ஆட்சி போய், பிரேமதாசா ஜனாதிபதியாக  வந்தார். வந்ததும் வராததுமா, தேர்தல் பிரச்சாரத்தில வாக்கு குடுத்தமாதிரி, அமைதிப்படையை ஊருக்கு அனுப்பி வைச்சார். அமைதி படைக்கு பின்னாலேயே தமிழ் தேசிய இராணுவமும் (TNA )  நாட்டை விட்டோட, பழையபடி வடக்கு கிழக்கு புலியளின்ர கட்டுபாட்டில வந்தது.
   அமைதிப்படை போன உடன,  முதல் வேலையா ஊருக்கு டிக்கெட் போட்டன். பஸ் ஏறி ஊருக்கு போகேக்க வவுனியாவை கடந்த உடன ஒரு இனம் புரியாத சந்தோசம். சுதந்திர காற்றை சுவாசிக்கிரமதிரி ஒரு பீலிங். வழி நெடுகிலும் சண்டையின்ர வடு கட்டடங்களில தெரிஞ்சிது. ஊரில எல்லாரும் அமைதி படையின்ர, TNA இன்ற அட்டகாசத்தை கதை கதையா சொன்னாங்கள். நானும் என்ற பங்குக்கு கொழும்பு, காலி பற்றி எல்லாம் புழுகி தள்ளினன்.  கூட்டளியளோட நானும் பருத்தித்துறை, வல்வெட்டி துறை, நாகர்கோவில், கொடிகாமம், சாவகச்சேரி, காரைநகர் கசூர்னா பீச், நைனாதீவு   எண்டு யாழ்ப்பாண பக்கமெல்லாம் சைக்கிள்ள சுதந்திரமா சுத்தி திரின்சன் . கொஞ்ச நாள்ள யாழ்தேவி ரயிலும் ஓட தொடங்கிற்று.  யாழ்ப்பாண சனமெல்லாம் கண்டி, கொழும்பு, நுவரெலிய, கதிகாமம் எண்டு ட்ரிப் போய் வந்திசினம்.
  பேச்சுவார்த்தை எண்டு ஹமீது அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து போனாலும், ஒண்டும் உருப்படியான தீர்வு வரமாதிரி இல்லை. ஆனா சனம் எதோ
     பிரச்சினை தீர்ந்தமாதிரி, உடைஞ்சு போன வீடு வளவு எல்லாம் திருத்தி, வாழ்க்கையை நம்பிக்கையோட தொடங்கிச்சினம். 
எல்லாம் ஒரு வருசத்துக்குதான்.  மட்டகளப்பில தொடங்கின சண்டை எல்லா இடமும் பரவ, சண்டை, ஷெல் அடி, அகதி எண்டு  பழைய வாழ்க்கை திரும்ப தொடங்கிற்று. 

Tuesday, October 25, 2011

ஒரு அகதியின் டயரி - 7 - JVP காலம்

என்னைபோல பிள்ளை பிடிக்கு தப்பி, கொழும்புக்கு ஓடின பெடியளுக்கு, கண்டி, காலி, கொழும்பில இருக்கிற தமிழ் கடையள்தான் வேடந்தாங்கல். படுக்கை, சாப்பாடு எல்லாம் free . அதோட கடையில நிக்கிறதால, கை செலவுக்கும் காசு கிடைக்கும்.   நான் தங்கினது வெங்காயம், மிளகாய், அரிசி, கருவாடு எல்லாம் கொழும்பில இருந்து இறக்கி, சில்லறை வியாபாரிகளுக்கு விக்கிற ஒரு பலசரக்கு கடையில.  ஞாயிற்று கிழமை லீவு. அண்டைக்கு  நாங்க, காலி கோட்டை, கடற்கரை, கோயில் எண்டு சுத்தி திரிவம். எவ்வளவுதான் குளிச்சு வடிவா வெளிக்கிட்டாலும், கடை கருவாட்டு மணம் கூடவே வாறதால, சிங்கள பெட்டையள் ஒருத்தரும் திரும்பியும் பார்க்க மாட்டாளவ. கையில கொஞ்சம் காசு கூடிச்செண்டால்  வெளிக்கிட்டு கொழும்புக்கு போய் ரெண்டு படமும் பார்த்து கிடந்த காசெல்லாம் சிலவழிச்சு முடிய திரும்பி கடைக்கு வருவம்.
   அது JVP பிரச்சினையின்ற  உச்சகட்ட நேரம். வேலியில நிண்ட ஓணானை பிடிச்சு  பாக்கெட்டுக்க விட்ட மாதிரி, இந்தியன்  ஆமி வந்த பிறகு,  வடக்கு கிழக்கில அட்டகாசம் பண்ணி திரிந்த அதிரடி படையை  (STF) ஊருக்க அனுப்ப,  அவங்கள் தங்கட ஊருக்குள்ளேயே பெடியளை கொன்று குவித்த நேரம் அது.  கொழும்புக்கு போகேக்க கழுத்துறை ஆற்றம்கரையில அரைவாசி எரிஞ்ச சடலமெல்லாம் நான் பார்த்திருக்கிறன்.  

  நான் காலிக்கு  வந்த கொஞ்ச நாளில,  கரனும் பயிற்சி முகாமில இருந்து தப்பி ஓடி கடைக்கு வந்திற்றான். கரன் ஊரிலேயே கடை வைச்சிருந்தவன். எண்டாலும் பிசினஸில அவ்வளவு அக்கறை  இல்லை. அங்க இங்க காசு பிரட்டி வெளிநாட்டுக்கு போக ட்ரை பண்ணிக்கொண்டு திரிஞ்சான்.  நான் எப்படா இந்தியன் ஆமி போகும், எப்ப வீட்ட திரும்பி போறது எண்ட நினைப்பில இருந்தன்.
 வெளிநாட்டுக்கு போறதில பெரிய பிரச்சினை ஒரு நம்பிக்கையான ஒரு நல்ல ஏஜண்டை பிடிக்கிறதுதான். ஒரு ஏஜெண்ட்க்கு பத்து துணை எஜண்ட். அவைக்கு பத்து பேர் எண்டு ஏஜெண்ட் வேலை செய்யிறவ கனபேர்.
ஆளாளுக்க கமிசன் எடுக்க வெளிநாட்டுக்கு போற rate எகிறீரும்.
அதோட ஊரில உள்ள சுத்துமாத்து காரரெல்லாம் ஏஜெண்ட் எண்டு  சொல்லிக்கொண்டு திரியிறதால நம்பிக்கையான ஆளை பிடிக்கிறது கஸ்ரம்.
 அங்க இங்க விசாரிச்சு  கடைசியா வெள்ளவத்தையில இருக்கிற ஒரு lodge  சுல இருந்த  ஒரு ஏஜெண்ட சந்திக்க நானும் காரனோட போனன்.  அவருக்கு பெயரே "எஜின்சி கணேசு" தான்.  அவரும் வலு பந்தாவாதான் இருந்தார்.

இப்பதான் பத்துபேரை கனடாவுக்கு அனுப்பிபோட்டு வாறன் அது இது எண்டு அளந்துபோட்டு,

"நீங்க எங்க போகவேணும்" எண்டார்.

கரன் வெளிநாட்டுக்கு போக வேணும் எண்டு  யோசிச்சானே  தவிர  எங்க போறது எண்டு யோசிக்கேல்ல.


"கனடா, லண்டன், ஜெர்மனி எங்க எண்டாலும் பரவாயில்லை. கெதியா போக கூடிய நாட்டுக்கு அனுப்புங்கோ"

"அடுத்த கிழமை பேங்க்கொக் கில இருந்து லண்டனுக்கு ஒரு batch போகுது. நாளைக்கே காசை கொண்டந்து கட்டினா அவையோட உங்களையும் அனுப்பி விடுறன் "

"எவ்வளவு காசு அண்ணை"

" வெளியில பத்து போகுது. நீங்க என்னட்ட நேர வந்தபடியால ஒம்பது  கொண்டுவந்து கட்டினா போதும் "

"ஒம்பது லட்சமா? கொஞ்சம் குறைக்கேலாதா ? இப்பதான் பயிற்சி முகாமில தப்பி வந்தனான்"

" தம்பி ஏலுமான அளவு குறைச்சாச்சு. உங்க கனபேர் காசோட ரெடியா நிக்கினம். கெதியா கொண்டந்து கட்டினா அடுத்த கிழமையே லண்டன் போகலாம்"

வெளியில வந்த உடன நான் " ஒன்பது லட்சத்துக்கு எங்கடா போறது. உவனை பார்த்தா  சுத்தல்காரன் மாதிரி இருக்கிறான்" எண்டன்.

  ஆனா கரன், கனடா மாமா, லண்டன் சித்தப்பா, அவுஸ்திரேலியா அன்ரி எண்டு எல்லாரோடையும்  போன்ல கதைச்சு, இன்டர்நேஷனல் லெவலில கடன் வாங்கி ரெண்டு மூண்டு நாளில ஒம்பது லட்சம் சேர்த்திற்றான்.

 ஒம்பது லட்சத்தையும் ஆயிரம் ரூபா நோட்டா மாத்தி கட்டு கட்டா கட்டி, ஒரு பையில போட்டுக்கொண்டு, ரெண்டு பேரும் விடிய காலமா காலியில இருந்து கொழும்புக்கு பஸ் ஏறினம்.     
  பஸ் ஹிக்கடுவயை தாண்டேல்ல.   நடுவழியில அதிரடி படை செக்கிங் எண்டு மறிச்சு போட்டாங்கள். ஒம்பது லட்சத்தோட ரெண்டு பேரையும் பிடிச்சான் எண்டால், காசும் போய் ரெண்டு பேரும் ஆத்தில பிணமா மிதக்க வேண்டியதுதான்.
  ஆனா பஸ் வாசலில நிண்ட ஆமிக்காரன், ஐடென்ட்டி கார்டை பாத்திற்று,

தேமலதா? வகிண்டோன்ன ( தமிழனா ? இறங்க வேண்டாம் ) எண்டான்

அண்டைக்குத்தான் முதன் முதலா தமிழனா பிறந்ததுக்கு சந்தோஷபட்டன்.          
     









Thursday, October 20, 2011

ஒரு அகதியின் டயரி - 6 The great escape



ஊருக்க பிள்ளை பிடிகாரரிட்ட பிடிபட்ட பெடியள்ள என்ட நண்பன் கரனும் ஒருவன். கரன் எவ்வளவு  பிரச்சினை எண்டாலும், விடிய காலம வந்து சந்தியில இருக்கிற தன்ர கடையை திறந்திருவான். அதுக்கு முக்கிய காரணம், சந்திக்கு பக்கத்தில்தான் அவன்ர அன்புக்குரியவளின்ர வீடும் இருக்கு. ஊர் முழுக்க பிள்ளை பிடிகாரர் தொல்லை எண்டாலும், கடைக்காரனை பிடிக்க மாட்டாங்கள் என்ற ஒரு நம்பிக்கை வேற.  வழக்கம் போல அண்டைக்கும் விடிய காலம வந்து கடைக்கதவைத் திறந்தாச்சு. ஆனா பத்து மணிபோல, வானில வந்த பிள்ளை பிடிகூட்டம் என்ன சொன்னாலும் கேளாமல் கடைக்க நிண்ட கரனை இழுத்து வானுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். முகாம் முகாம ஏறி இறங்கி விசாரிச்சும் ஒரு பிரயோசனமும் இல்லை. அங்கை இங்கை எண்டு மாற்றி  மாற்றி வைத்திருந்து கடைசியா கொண்டுபோய் பயிற்சி  முகாமில விட்டுட்டாங்கள்.

    இப்பதான் கொஞ்சநாளாதான் life interesting  போய் கொண்டிருந்தது. அதுக்குள்ள எல்லாமே  தலை கீழா மாறிப்போச்சு. இயலாமை, வெறுப்பு எல்லாம் சேர்ந்து ஆத்திரம் ஆத்திரமா வந்தாலும், கட்டுப்படுத்திக்கொண்டு  சும்மா இருந்தான். ஆத்திரபட்டு, வாக்குவாதப்பட்ட கனபேர், எழும்ப ஏலாத அளவுக்கு அடி வாங்கி மூலையில கிடந்தினம். அடி வாங்கிறதை விட, இப்போதைக்கு அவங்கட போக்கில போறதுதான் புத்தி எண்டு கரன் பொறுமையா இருந்தான். பிடிபட்ட எல்லா பெடியளையும் ஒரு பெரிய ground  இல வரிசையா நிப்பாட்டி, ஒருத்தர் பெரிய lecture  அடிச்சுக்கொண்டு இருந்தார். எதிரியை எப்படி தாக்கிறது, எதிரியை எப்படி பிடிக்கிறது எண்டு சொல்லி தருவம். அது இது எண்டு கனக்க கதைச்சுக்கொண்டு போனார். "எதிரி எதிரி எண்டுறீங்க, யாருங்கோ அந்த எதிரி" எண்டு கேக்க வேணும் போல இருந்தது. ஆனா எதுக்கு வம்பு எண்டு பேசாம இருந்திற்றான்.

   பயிற்சி சரியான கடுமையா இருந்தது. ஓடுறது. தாவுறது, தவழுறது எண்டு நாள் முழுக்க துரத்திக்கொண்டு இருந்தாங்கள். பின்னால வாறவங்களுக்கும் , முரண்டு பிடிக்கிறவங்களுக்கும்  அடி விழுகிறதால கஷ்ரபட்டு பயிற்சியை செய்துகொண்டு இருந்தான். பயிற்சி முகாமில கனக்க ஊர் பெடியள் இருந்தாலும் ஒருத்தரோடும் கதைக்க பிடிக்கேல்ல. எப்பிடி இந்த நரகத்தை விட்டு தப்பி போறது எண்டு யோசனையிலேயே காலம் கழிந்தது. பயிற்சி நேரம் ஒத்துழைத்த படியால சுதந்திரமா வெளியில உலாவ கூடியதா இருந்தது. முகாமிட அமைப்பு, காவல் எல்லாம் அவதானிக்க கூடியதா இருந்திது.
 ஒரு நாள் நடுநிசி வேளை, எல்லாரும் அயர்ந்து தூங்கிற நேரம், கரன் முள்ளு கம்பிகளுக்கு கீழால தவண்டு, வேலிகளுக்கு மேலால தாவி, பற்றை காட்டுக்குள்ளால ஓடினான். சும்மா செல்ல கூடாது. எடுத்த பயிற்சி நல்ல உதவி செய்தது. ஓடி ஓடி விடியிற நேரம் மெயின் ரோடுக்கு வந்திற்றான். விடிய காலமா வந்த ரவுண் பஸ்சை பிடிச்சி ஒருமாதிரி அந்த நரகத்தில இருந்து தப்பினான். ஊரை விட்டு போக மனம் இல்லாட்டியும், அண்டைக்கு ஓட வெளிக்கிட்டவன்தான் ஓடி ஓடி கடைசியா கனடாவில்தான் போய்தான் அந்த ஓட்டம் நிண்டுது.

Wednesday, October 12, 2011

ஒரு அகதியின் டயரி - 5 - பிள்ளபுடி காலம்


சின்ன வயதில, மெயின் ரோட்டுக்கு போகாத, பிள்ளைபிடிகாரன் பிடிச்சுக்கொண்டு போயிருவான். கொண்டுபோய் கருவாடு காய விடுறஇடத்தில காகம் குருவி கலைக்க விட்டிருவான் எண்டு பயமுறுத்துவினம். அப்ப நான் ஒரு பிள்ளை பிடிகாரனையும் காணேல்ல.  ஆனா நாங்க  படிக்கேக்க உண்மையாவே பிள்ளை பிடிகாரர் ஊருக்க உலாவ தொடங்கிரான்கள். ஊருக்க வானில ஏழு எட்டு பேரா வருவாங்கள். கண்ணிலபடுற பெடியளை துப்பாக்கி முனையில பிடிச்சுக்கொண்டு போயிருவங்கள். மாட்டுபட்டா   அவளவுதான்.  training  எண்ட பெயரில நாலு தரம் ஓட விட்டிட்டு, கொண்டுபோய் சண்டைக்கு நடுவில விட்டிருவங்கள். அமைதி படையின் ஆசிர்வாதத்தோட பிள்ளை பிடி நல்லாவே நடந்தது.  விருப்பம் இல்லாம துப்பாக்கி தூக்குறது எண்டது கொடுமையான விஷயம். ஏன் சண்டை பிடிக்கிறம், எதுக்கு பிடிக்கிறம் எண்டு தெரியாம, சுடவும் மனம் இல்லாம சண்டைக்கு  நடுவில நிண்டு சாகவேண்டியதுதான்.
       ஒருக்கா நான் யாழ்ப்பாணம் டியூஷனுக்கு போகேக்க பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். கொண்டு போய் யாழ்ப்பாணம் central college ground இல பொழுதுபடும் மட்டும் இருத்தி வைத்திருந்தாங்கள். ஏதோ என்ர நல்ல காலம் அண்டைக்கு ஒருமாதிரி  தப்பி வந்திரன். அதுக்கு பிறகு எங்கட அட்டகாசம் எல்லாம் ஊரோட அடங்கி போச்சு. ஒருக்கா சந்திக்கு கடைக்கு போகேக்க அங்க வைச்சும் பிடிச்சிற்றான்கள். ஆனா அம்மாவும் சந்தியில நிண்ட  வேற கொஞ்ச பேரும் குழம்பின படியால என்னை இறக்கி விட்டிற்று போயிறான்கள். அதுக்கு பிறகு எங்களுக்கு வீட்டில house arrest போட்டாச்சு.  ஊரெல்லாம் ஒருவித டென்ஷன். ஊருக்க கன பெடியள் பிடிபட்டு போனாங்கள். எப்ப யாரு பிடிபடுவன்களோ எண்டு ஒரு பயம். ஆனா எனக்கு வீட்டுக்க இருந்திருந்து போர் அடிச்சு போய், அம்மாவுக்கு தெரியாம பின் ஒழுங்கையால Cricket, Volleyball எண்டு திரிய, அம்மா இவனை இங்சை வைத்திருந்தால் கரைச்சல் எப்பிடியாவது கொழும்புக்கு அனுப்ப வேணும் எண்டு தீர்மானிச்சா.

ஆனா கொழும்புக்கு போறது ஒண்டும் லேசான வேலையில்லை. வங்களாவடி சந்தியில தொடங்கி யாழ்ப்பணம், ஆனையிறவு, கிளிநொச்சி, மாங்குளம் , வவுனியா எண்டு வழி  நெடுக பிள்ளை பிடி முகாம்கள் இருக்கு. இவ்வளவு முகாமையும் தாண்டி, risk   எடுத்து போறதுக்கு பயமா இருந்தாலும் வீட்டுக்க அடைபட்டு இருக்கேலாம நானும் ஓம் எண்டுட்டன். பஸ்சில பாதுகாப்பா போக ஏலாது. வேற என்ன செய்யலாம் எண்டு யோசிக்கேக, பக்கத்து வீட்டு குகன் அண்ணா, நீ பயப்பிடாம என்னோட லொரியில வாடா. நான் கூட்டிக்கொண்டு போய் காலியில விடிறன் எண்டு சொல்ல நானும் OK எண்டு வெளிக்கிட்டிடன்.

    அம்மன் கோவில்ல ஒருக்கா வடிவா விழுந்து கும்பிட்டு, லொரியில ஏறியாச்சு. லொறி முழுக்க புகையிலை சிற்பம். ஆனா தேவைப்பட்டா எண்டு டிரைவர் seat  க்கு பின்னால இருக்கிற கதவால உள்ழுக்க போய் ஒளிக்க ஒரு சின்ன இடைவெளி விட்டுதான் சிற்பம் அடுக்க பட்டிருந்தது. வங்களாவடி சந்திக்கு போகம, லொறியை வடக்கு ரோடால நேர யாழ்ப்பாணத்துக்கு விட்டு முதல் barrierஐ ஈசியா தாண்டியாச்சு. ஆனா ரெண்டாவது barrier பண்ணை பாலத்தடியில லொறியை மறிச்சு  இறக்கி போட்டாங்கள்.  கொழுப்புக்கு புகையிலை கொண்டு போறன் அது இது எண்டு சொல்ல, ஒரு நமட்டு சிரிப்போட சரி போ எண்டு விட்டுட்டாங்கள். எப்படியும் போற வழியில மாட்டுவார் எண்ட நம்பிக்கை போல.
  எங்கட நல்ல காலத்துக்கு நல்ல அடைமழை பெய்ய தொடங்கிற்று. மழையால கிளிநொச்சி , மாங்குளம் barrier  ஐ இறங்காமலே தாண்டியாச்சு. இன்னும் வவுனியா மட்டும் தான் எண்டு கொஞ்சம் நிம்மதியா போகேக்க வந்தது  வினை.


லொறி மாங்குளம் தாண்டி போய்க்கொண்டு இருந்தது. ரெண்டு பக்கமும் அடர்ந்த காடு. அது அடிக்கடி சண்டை நடக்கிற ஏரியா வேற.  இருந்தாப்போல காட்டுக்க இருந்து கொஞ்ச கூர்க்கா இந்தியன் ஆமிக்காரர் ரோட்டுக்கு வந்தாங்கள். வந்து லொறியை மறிச்சு  காட்டுக்க திருப்பி எங்கள் எல்லாரையும் இறக்கி பின் பக்கம் பார்க்க இருத்தி வத்திருந்தான்கள். பின்னால துப்பாக்கியோட ஆமிக்காரர். நான் அதுதான் என்ர கடைசி நாள் எண்டு நினைச்சன். காட்டுக்க இருந்த படியால பின்னால ரோட்டில என்ன நடக்கிறது எண்டு ஒண்டும் தெரியேல்ல.  ஆனா தொடர்ந்து வாகனங்கள் போற சத்தம் மட்டும் கேட்டுது. ஒரு நாலு ஐந்து மணித்தியாலம் அப்பிடியே இருந்திருப்பம், அதுக்கு பிறகு வாகன சத்தம் குறைஞ்சிது . ஆமிக்காரரும் எங்களை போக சொல்லிற்று தங்கட truck  இல ஏறி போயிற்றாங்கள். அப்பத்தான் போன உயிர் திரும்பி வந்தமாதிரி இருந்தது. பிறகுதான் கேள்விபட்டம் ஒரு பெரிய இராணுவ தொடரணி வவுனியாவில இருந்து யாழ்ப்பாணம் போறதுக்குதான் ஆமிக்காரர் guard பண்ணிக்கொண்டு நின்டிருக்கிறாங்கள் எண்டு. அதுக்குள்ளே human shield மாதிரி நடுவில நாங்கள். எங்கட நல்ல காலத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லாத படியால போக விட்டிட்டாங்கள்.

     வவுனியா தாண்டிக்குளம் barrier  இல லொறிக்கு எண்டு தனி க்யூ. லொறிஐ  பதிய போகேக்க நானும் சேர்ந்து போய் பிள்ளை பிடி காரர் பக்கம் போகாமல் மற்ற பக்கத்தால போய் லொறியில  ஏறிற்றன்.   கடைசி barrier  உம் தாண்டியாச்சு. ஆனா கன நேரம் காட்டுக்க நிண்டதால இரவு சாப்பாட்டுக்கு வவுனியவில நிக்க வேண்டியதா போச்சு. இரவு சாப்பாடு சாப்பிட்டு வெளியில வாறன், வெள்ளை வான் ஒண்டு  பக்கத்தில வந்து என்னை இழுத்து உள்ளுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். ஊரில பிடிபட்டாலும் ஒண்டு ரெண்டு தெரிஞ்ச பெடியளாவது இருந்திருப்பான்கள். இஞ்ச வந்து இப்பிடி தனிய மட்டு பட்டுட்டன் . ஆனா குகன் அண்ணா விடயில்லை. பின்னால லொறியில தொடர்ந்து வந்து அவங்கட முகாமில, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா எல்லா இடமும் கதைச்சு  பதிஞ்சுதான் வாறம். அது இது என்னது சொல்லி ஒருமாதிரி வெளியால கொண்டு வந்திர்றார்.  அண்டைக்கு காலிக்கு போனவன்தான் இந்தியன் ஆமி ஊரை விட்டு போகுமட்டும் ஊர் பக்கம் போகவே இல்லை.
  இண்டைக்கு குகன் அண்ணா எங்களோட இல்லை . ஆனா அண்டைக்கு செய்த உதவியை உயிர் உள்ளவரை மறக்க ஏலாது..

Saturday, October 8, 2011

ஒரு அகதியின் டயரி - 4 அமைதி படை


நம்ம ஊர் ஆட்கள் சிலபேருக்கு   ஊரை பற்றியோ தீவை பற்றியோ குறையா கதைச்சா கோபம் பத்திக்கொண்டு வந்திரும்.  கஷ்டபட்டு உழைக்கிறதால உடம்பில உரமேறின ஆட்கள் அவையள்.  கையால ஒண்டு விட்டினமேண்டா சாகும் மட்டும் மறக்க ஏலாது.  யாழ்ப்பாணமே ஒரு சின்ன இடம்தான். அதுக்குள்ளே ஊருரா பிரிச்சு தங்கட ஊர் பெருசு. உங்கட குறைவு எண்டு கதைக்கிறவையும் கனபேர் இருந்திச்சினம்.  யாழ்ப்பணம் போற நேரத்தில,  சிலபேர் தீவை பற்றி குறைவா கதைச்சு என்ர தத்தாட்டையும் அடி வாங்கியிருக்கினம்.  யாழ்ப்பாண பள்ளிகூடத்தில என்ர முதல் நாள். பக்கத்தில இருந்தவன் எந்த ஊரென்று கேட்டான்.  நான் ஊரின்ர பெயர சொல்ல " ஐயோ இன்னொரு தீவானா. எப்பிடி பக்கத்தில வைச்சு சமாளிக்க போறேனோ தெரியேல்ல " எண்டான்.  எனக்கும் தாத்தான்ர  gene தானே.  வந்த ஆத்திரத்துக்கு ஒண்டு குடுக்கவேணும் மாதிரித்தான் இருந்தது.  ஏதோ என்னால முடிஞ்சது. மனதளவில நாலு சாத்து சாத்திற்று சும்மா இருந்திட்டன். 

  தலைவலி போய் திருகுவலி வந்த மாதிரி,  இந்திய  "அமைதி படை" வந்தும் நாங்க ஓடுறது நிக்கேல்ல.  ஆனா இந்தமுறை வித்தியாசமா எங்கட ஊர் பக்கம் சனம் அகதியா வர தொடங்கிற்றினம்.  யாழப்பாணத்தை பிடிக்க இந்திய இராணுவம் நடத்தின முதல் சண்டை. அவையின்ர உண்மையான முகம் அண்டைக்குத்தான் தெரிய தொடங்கிச்சு. அமைதிப்படைதானே எண்டு சண்டை நடக்கேக்க, வெளிக்கிட்டு ஓடாமல், வீட்ட இருந்த ஆட்கள் குடும்பத்தோட  கொல்லபட்டினர். இதைவிட  யாழ் வைத்தியசாலை படுகொலை, அராலி துறை படகு தாக்குதல் எண்டு சனம் கும்பல் கும்பலா செத்துபோச்சு. 
     
ஊருக்க சனபுழக்கம் கூடின படியால சாப்பாட்டு சாமானுக்கும் தட்டுபாடு வந்திற்று. கடையளிலஇதுவரைக்கும் விக்காமல் இருந்த உழுத்துப்போன அரிசி, புழு பிடிச்ச மா எல்லாமே வித்து தீர்ந்திற்று. சனம் கையில பையோட அரிசி வாங்க சந்தி சந்தியா அலைஞ்சு திரிஞ்சினம். இடைக்கிட  சைக்கிள்காரர் கொண்டுவாற அரிசி மூட்டையும்  ஒரு நிமிசத்தில வித்து தீந்திரும்.  


அப்பத்தான் பார்த்தான், என்ர பள்ளிகூடத்து பக்கத்து சீற் காரனும் பையோட நிண்டான். "என்ன இந்த பக்கம்" எண்டன் .  அரிசி வாங்க வந்தனான். தன்ர  தாத்தாவின்ர ஊரும் வேலணைதான் எண்டான்.  ஒரு நமட்டு சிரிப்போட, சரி வா மச்சான் எண்டு ரெண்டுபேருமா  சேர்ந்து அரிசி வாங்க அலைய தொடங்கினம்.

  இந்த   அகதி வாழ்க்கையில   பிரதேசவாதமும் சாதி வெறியும் குறைஞ்சு போனது என்னவோ உண்மைதான்.

Saturday, September 24, 2011

ஒரு அகதியின் டயரி - 3 -Crossfire


இப்ப எப்பிடியோ தெரியாது. அப்ப ஊரில இருந்து யாழ்ப்பாணம் போய் படிக்கிறது எண்டது ஒரு ஸ்டைல். யாழ்ப்பாணத்தில இருக்கிற பள்ளி கூடத்தில  சேர்ந்து படிக்க வேணும். அது சரிவரேல்ல எண்டால், டியூஷனுக்காவது டவுனுக்கு போய் வர வேணும். அதுதான் ஊருக்க கன பெடியளின்ர ஆசை. அங்க போய் படிக்கிறமோ இல்லையோ,  ஊருக்க செய்ய ஏலத சேஷ்டையள் எல்லாம்  ஊர் விட்டு ஊர் வந்து டவுனுக்கதான் செய்யலாம்.   O/ L  மட்டும் ஊரிலேயே படிச்ச எனக்கும்   ரிசல்ட் வந்த உடன டவுணுக்க படிக்கிற ஆசை வந்திற்று. நானும் யாழ்ப்பாண பள்ளிகூடங்களுக்கு application  போட்டு, அனுமதி பரீட்சைக்கு கடிதமும்  வந்திருந்தது.

அப்ப தீவுபகுதி சனத்துக்கு போக்குவரத்துதான் பெரிய பிரச்சினையா இருந்தது. இங்க இருந்து யாழ்ப்பாணம் போறதெண்டால்  ஊர்காவல்துறை - காரைநகர் ferry (படகு) இல ஏறி போகவேணும் அல்லது யாழ் கோட்டைக்கு பக்கத்தில இருக்கிற பண்ணை பாலத்தாலதான்  போகவேணும். ஆனா ரெண்டுமே பிரச்சினையான பாதைதான்.  நேவிக்கரனின்ர கெடுபிடி தாங்கேலாமல் படகு சேவை முற்றாக நிப்பாட்டியாச்சு.   பண்ணை பலத்தால போற எண்டாலும் உயிரை கையில பிடிச்சுக்கொண்டுதான் போக வேண்டியிருந்தது.  ஒரு    பக்கம்   இயக்கங்களின் சென்றி பொயின்ற்   , மற்ற பக்கம் கோட்டை சுவர்.  நடுவில பண்ணை ரோடு. ஆமிகாரர் வெளியில  வர ஏலாட்டியும், அப்பப்ப பண்ணை ரோட்டால போற  வாகனங்களை சுட்டு தங்கடை வீரத்தை கட்டிக்கொண்டு இருந்தாங்கள்.

    அண்டைக்கு எனக்கு யாழ்ப்பணத்தில  இல அனுமதி பரீட்சை. விடிய வெளிக்கிட்டு பஸ் ஏறுறதுக்கு சந்தியில போய் பாக்கிறன். கடையெல்லாம் பூட்டு.  சந்தியில நிண்ட ஒராள், "டெலோவும்  புலியளும் சண்டை பிடிக்க வெளிக்கிட்டுடான்கள்.  இனி பஸ்சும் ஓடாது . இங்கினேக்க நிண்டு விடுப்பு பார்க்காமல் கெதியா வீட்ட போங்கோ "  எண்டார்.  எனக்கு எக்ஸாமை விட்டிற்று   வீட்ட போகவும் மனமில்லை.கொஞ்சநேரம்  நிண்டு பார்த்தான். சண்டை நடக்கிறமாதிரி ஒண்டும் தெரியேல்ல.  சரி பக்கத்து ஊர் வேலணைக்கு  போய் அங்க இருந்து பஸ் எடுப்பம் எண்டிற்று சைக்கிளில வேலணை  வங்களாவடி சந்திக்கு போனான். 
      வங்களாவடி சந்தியை நெருங்கேக்க பின்னால மோட்டர் சைக்கிளில வந்தவங்கள் சுட தொடங்கிற்றாங்கள். சந்தியில இருந்தும் சுடுறாங்கள் . நடுவில நான். நான் சைக்கிளை போட்டிற்று விழுந்து படுத்திற்ரன். கொஞ்ச நேரம் ஒரே வெடிச்சத்தம். புழுதி மணமும் வெடி மருந்து மணமும் சேர்ந்து அடிச்சிது.  அவ்வளவு ரவுன்சையும், குண்டுகளையும் காரைநகர் நேவி கேம்ப்க்கு  அடிச்சிருந்தா கேம்ப்பையே பிடிச்சிருக்கலாம்.

கொஞ்ச நேரத்தில சத்தம் நிண்ட உடனே நிமிர்ந்து பார்த்தன். ரோட்டுக்கு மற்ற பக்கத்தில கரண்ட கம்பி (11000V) அறுந்து வேலிக்கு  மேல விழுந்து வேலி எரிஞ்சு கொண்டிருந்தது. மெல்லமா சைக்கிள வேலிக்கு மேலால தூக்கி போட்டுடு வேலியை பாஞ்சு, சைக்கிளையும்  தூக்கிக்கொண்டு ஓட தொடங்கிட்டன்.  ஓடி ஓடி அராலி துறை சந்திக்கு வந்திட்டன். புங்குடுதீவு, வேலணை, ஊர்காவல்துறை இல இருந்து யாழ்ப்பாணம் போற எல்லா பஸ்சும் அராலி சந்தி தாண்டித்தான் போகவேணும்.  ஆனா பஸ் ஒண்டையும் காணேல்ல. பாதி தூரம் வந்தாச்சு. சரி திரும்பி வீட்ட போவமா எண்டு யோசிச்சுக்கொண்டு நிக்கேக்க, சைக்கிள்ள வந்த இன்னொரு ஆள், நானும் யாழ்ப்பாணம்தான் போறான். வரும் ரெண்டுபோரும்  ஒண்டா போவம் எண்டு சொல்ல நானும் ஓம் எண்டு வெளிக்கிட்டுடன். 
  
      கோட்டைக்கு கிட்ட போகேக்க கை கால் எல்லாம் நடுங்க தொடங்கிற்று. ரோட்டில எங்களை தவிர வேற ஒருத்தரும் இல்லை. ரோட்டில இருந்து  கோட்டை சுவர் ஐம்பது மீட்டர் தூரம்தான் இருக்கும். இந்த நேரம் பார்த்து என்ர சைக்கிளுக்கு காத்து வேற போச்சுது. மகாபரதத்தில கர்ணன் சாக முதல் , தேர் சில்லு நிலத்தில புதைந்துதாம். அது மாதிரி என்ர சைக்கிளும் கடைசிநேரத்தில கை விட்டிற்று. அந்த அசுமாத்தத்தை பார்த்திற்று ஆமிக்காரன் சுட்டிருவானோ எண்டு பயமா இருந்தாலும், உள்ள எல்லா கடவுளுகளையும் கும்பிட்டுக்கொண்டு  ரெண்டு பேரும் மெல்ல மெல்லமா கோட்டையை தாண்டி டவுணுக்க போயிற்றம். 
    டவுணுக்க வந்த உடன கூட  வந்தவர் சொன்னார்.  " இவங்கள் தங்களுக்க அடிபட்டு சாகிறாங்கள். தாங்கள்  ஏன் ரவுன்சை வேஸ்டாக்க வேணும் எண்டு ஆமிக்காரன் சும்மா இருந்திற்றான் போல " எண்டார். 
  
 அந்த ஆள் சென்னது எவ்வளவு உண்மை எண்டு ஊருக்கு திரும்பி வந்த பிறகுதான் தெரிந்தது. சந்தியில ஒரு தண்ணி bowser  ஒண்டு எரிஞ்சு போய் இருந்தது .  கடை கட்டடம் ஒன்று வெடி வைத்து தகர்க்க பட்டிருந்தது.  நான் விழுந்து கிடந்த இடத்திற்கு பக்கத்திலிருந்த தபால் கந்தோர் அடியில், சண்டைக்கு நடுவில மாட்டுபட்டு ஒரு ஆள் இறந்து போயிருந்தான். 

Monday, September 12, 2011

ஒரு அகதியின் டயரி - 2 சுடலை காவல்

  
 எங்கட நல்ல காலத்துக்கு அண்டைக்கு நேவிக்காரன், ஊர் எல்லை வரைக்கும் வந்திற்று திரும்பி போயிற்றான். ஊர் பக்கம் வரயில்லை. இரவு முழுக்க ஒரு கோயிலில படுத்திற்று அடுத்த நாள் விடிய காலம கொண்டு போன சாமான் எல்லாம் திருப்பி அள்ளி கட்டிக்கொண்டு வீட்ட வந்திற்றம். கொண்டு போன சாமானில முக்காவாசி அகதி வாழ்க்கைக்கு உதவாத சாமான்.   போட்டோ  ஆல்பம் , ஒரு சூட்கேஸ் நிறைய சாறி, அது இது எண்டு கிடந்ததை கொண்டு ஓடினதே தவிர எது எது தேவை எண்டு யோசிக்க இல்லை. ஆனா பிறகு இப்படி ஓடேக்க மறக்காமல் கொஞ்ச சட்டி பானை, அரிசி, தேங்காய் எண்டு எடுத்துக்கொண்டுதான் ஓடுறது. 
   நேவிக்காரன் வாறானோ இல்லையோ, அடிக்கடி வதந்தி பரவி சனம் ஓடுறது வழக்கமா போச்சு. இதை தடுக்க ஒரு நாள் வாசிக சாலையில கூட்டம் நடந்தது. நேவிக்காரன் அடிக்கடி சத்தம் இல்லாம கடற்கரை பக்கம் வந்திற்று போறான். ஊருக்க அவங்கள் வந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்க முதல் நாங்கள் வெளிக்கிட்டு போகவும் வேணும். அதுக்கு என்ன செய்யலாம் எண்டு ஒரு பெரிய மந்திரஆலோசனை நடந்தது. கடைசியா கடற்கரைக்கு பக்கத்தில இருக்கிற சுடலையடியில இரவில காவல் இருக்க வேணும், எதாவது அசுமாத்தம் இருந்தா ஓடி வந்து கோயில் மணியை அடிச்சு எல்லாரையும் உசார் படுத்த வேணும் எண்டு முடிவெடுக்க பட்டது. எல்லாம் சரி ஆனா பூனைக்கு யாரு மணி கட்டுறது. இரவில சுடலையில நிண்டு யாரு காவல் காக்கிறது ?
     ஆனா கனபேர் தாங்கள் வாறம் எண்டு கையை தூக்கிசினம். எல்லாரும் தூக்குகினம் எண்டு போட்டு நானும் ஓம் எண்டுட்டன். எல்லாரையும் குரூப் குரூப்பா பிரிச்சு எப்ப எப்ப காவல் இருக்க வேணும் எண்டு அட்டவணை   எல்லாம் போட்டாச்சு. எங்களுக்கு விழிப்பு குழு எண்டு ஒரு நல்ல பெயர் வேற சூட்டப்பட்டது.  ஒரு நாள் அமாவாசை கும்மிருட்டு நாளில எனக்கு duty வந்தது. அடிக்கவே கூடாது என்ற ஒடர் ஓட ஒரு torch லைட்உம் தரப்பட்டது. நாங்கள் மூண்டு பேர் சுடலைக்கு பக்கத்தில இருக்கிற பூவரச மரத்தடியில காவல் இருந்தம்.  ஓடேக்க சரியா ஊர் பக்கம் ஓட வேணும் எண்டதால,  நான் அடிக்கடி ஊர்பக்கம் திரும்பி திசையை சரி பார்த்துக்கொண்டு இருந்தன். கும்மிருட்டு, பக்கத்தில இருந்த ஆளை கூட சரியாய் தெரிய இல்லை. நேவிக்காரன் பக்கத்தில வந்து, ஊருக்க    எப்பிடி போறது எண்டு வழி கேக்கும் மட்டும் சத்தியமா அவங்கள் வாறது தெரிய போறதில்லை. எண்டாலும் ஒரு அசாத்திய துணிவோட காவலுக்கு நிண்டம்.
    இரவு ரெண்டு மணிபோல பனங்காய் பணியாரமும் தேத்தண்ணியும் வந்தது. அதையும் ஒரு பிடி பிடிச்சிற்று காவலை தொடர்ந்தம். விடிய காலமா நாலரை ஐந்து மணி இருக்கும். சாடையா விடிய தொடங்கிற்று. கடற்கரை பக்கமா ஏதோ நடமாட்டம். சின்னதா ஒரு லைட் வேற தெரிஞ்சுது.  நான் ஓட ரெடி. ஆனா கூட இருந்த ஆள், கொஞ்சம் பொறுங்கோ இன்னும் கிட்ட வரட்டும்  எண்டு சொல்ல நாங்கள் மரத்துக்கு பின்னால ஒளிச்சிருந்து பார்த்து கொண்டிருந்தம். கிட்ட வந்த உடன பார்த்தா , யாரோ ஒரு குடிகாரன்  தவறணையில கள்ளு அடிக்சு விழுந்து கிடந்திற்று விடிய வெறி முறிய, ஒரு பீடிஐயும் பத்த வைச்சுக்கொண்டு கடக்கரை ஓரமா நடந்து வந்து கொண்டு இருந்தார்.  நாங்கள் இருந்த பயத்தில அவருக்கு நல்ல ஏச்சு கொடுத்திற்று அன்றைய காவல் கடமையை முடிச்சுக்கொண்டு வீட்ட திரும்பினம்.

Thursday, September 8, 2011

ஒரு அகதியின் டயரி - 1


அகதி வாழ்க்கை ஈழத்தமிழனின் தலைவிதி, இதுக்கு நானும் விதிவிலக்கில்ல. எண்பத்தி நாலாம் ஆண்டு முதல் முதலா வீட்ட விட்டு  அகதியா வெளிக்கிட்ட நாள் முதலா, ஊருரா அலைஞ்சு, நாடு நாடா அலைஞ்சு கடைசியா இங்க வந்து தஞ்சம் அடைஞ்சு இருக்கிறன்.
  வன்னியில எங்கட மக்கள் பட்ட கஷ்ரத்தோட பாத்தா, நான்  பட்டதெல்லாம்  தூசு எண்டாலும், அதையும் எழுதுறன்.  இந்த தொடர்பதிவை நிம்மதி தேடி, நாட்டை விட்டு, உடமைகளை துறந்து,   படகேறி பாக்கு நீரிணையை கடக்க முற்பட்டபோது,   பொங்கும் கடலில்    மடிந்து போன எம் உறவுகளுக்கு காணிக்கையாக்குகிறேன்.

  .      யாழ்ப்பணம் தீவுபகுதியில இருக்கு எங்கட ஊர்.   கடலுக்கு பக்கத்தில இருக்கிற உவர் நிலம் எண்டாலும், புகையிலை, மிளகாய், வெங்காயம் எண்டு பயிரிட்டு கஷ்ரபட்டு உழைக்கிற விவசயிகள், அதை கொண்டுபோய் இலங்கை முழுக்க விக்கிற வியாபாரிகள் எண்டு ஒரு பிஸியான ஊர்.  ஊருக்க ரெண்டு கோயில். அங்க நிண்டு அரட்டை அடிக்கிற பழசுகள். சைக்கிள்லில  சுழட்டிக்கொண்டு திரியிற இளசுகள், எல்லாம் நம்ஊரிலும்  உண்டு. யாழ் கோட்டை, காரைநகர், நயினா தீவு எண்டு மூண்டு முகாம்களுக்கு இடையில இருந்தாலும், அப்பப்ப வந்து  விழுந்து வெடிக்கிற  செல்களை தவிர ஊர் அமைதியாதான் இருந்தது.


 ஒருநாள் விடிய காலம ஐந்தரை மணி இருக்கும். அம்மன் கோயில் ஒலிபெருக்கியில பெரிசா பக்திப்பாட்டு போய்க்கொண்டிருந்தது. அம்மன் கோயில் பாட்டு சத்தம், ஊரில இருக்கிற கொஞ்ச கும்பகர்ணனின்ர சொந்தகாரரை தவிர, மற்ற எல்லாரையும் நித்திரையால எழுப்பி விட்டிருந்து. நானும் தம்பியும் எழும்பி முகம் கழுவீற்று, அம்மா காச்சி தந்த பாலையும் குடிச்சிற்று, மாடுகளை தரவை காட்டுக்கு ஒட்டி கொண்டு போய் கொண்டிருந்தம். ஊருக்கு மேற்கால தோட்டவெளி. அதையும் தண்டி போனா கடற்கரைஐ ஒட்டி இருக்குது தரவைக்காடு. பள்ளிகூடம் போக முதல், மாடுகளை கொண்டு போய் தரவையில மேய விட வேண்டியது எங்கடவேலை . ஊரில இருக்கிற சில பேருக்கு, காட்டுக்கு போய் கற்றோட்டமா  காலை கடன் முடிச்சாத்தான் அண்டைய பொழுது விடிஞ்ச மாதிரி இருக்கும். அவையும் எங்களோட சேர்ந்து காட்டு பக்கம் வந்து கொண்டிருந்தினம். நாங்க தரவை காட்டுக்கு நடுவில நிக்கிறம், தலைக்கு மேலால ஏழு  ஹெலிகாப்டர்கள் பதிவா கரம்பன் பக்கமா பறந்து போச்சுது. முதல்ல விடுப்பு பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள், சூட்டு சத்தம் கேக்க தொடங்கின உடன, விழுந்தடிச்சுகொண்டு வீட்ட ஓடி வந்திற்றம்.

   சூட்டு சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. முதல்ல என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல. ஆனா ஒன்பது, ஒன்பதரை  மணி அளவில கரம்பன் ஊர் சனமெல்லாம் அகதியா எங்கட ஊர் பக்கம் வர தொடங்கிற்றினம். நேவிக்காரன் கரம்பன் கடற்கரை பக்கமா  படகிலயும்  ஹெலிகாப்டர் இலயும் வந்து இறங்கிற்ரான் எண்டு அவ சொல்லித்தான்  எனக்கு தெரியும். நான் எங்கட வீட்டு மதிலில இருந்து, சனம் அகதியா, எங்க போறது எண்டு தெரியாம, கால் போன போக்கில,  போய் கொண்டிருக்கிறதை வேடிக்கை  பார்த்துக்கொண்டு இருந்தன். படுக்கையால  எழும்பி, உடுப்பு மாற்றக்கூட நேரம் இல்லாம. போட்ட உடுப்போட, கையில கிடைச்சதை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் கொண்டிருந்திச்சினம் .  அவையளோட வந்த நாய்களும், எங்கட ஊர் நாய்களும் சண்டை போட்டு, அதுகள் வேற ஊரை அமர்கள படுத்திக்கொண்டிருந்ததுகள்.

     முதல்ல  சும்மா விடுப்பு பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவும் அவற்ற friends உம் திடீர் தொண்டர்களா மாறி வந்த எல்லாரையும் அம்மன் கோயில் மடத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தினம். கொஞ்ச நேரத்தில கோயில் மடம் நிறைஞசுபோட்டுது. பன்னிரண்டு  ஒரு மணியாகியும் சூட்டு சத்தம் குறையிற மாதிரி இல்லை. இப்ப அண்ணாவும் அவற்ற friends உம் கோயில் திருவிழா  நேரம் அன்னதானத்துக்கு மடத்தில சமைக்கிற, அண்டா குண்டா எல்லாம் வெளியில எடுத்து, எல்லாற்ற  வீட்டையும் போய் அரிசி, தேங்காய் வாங்கி  கஞ்சி காச்ச தொடங்கிற்றினம். விடிய காலம படுக்கையல எழும்பி ஓடி வந்த சனம், ஒரு வாய் தேத்தண்ணி கூட குடிச்சிருக்க வாய்ப்பில்லை. எல்லாருக்கும் நல்ல பசி. கஞ்சியாவது கிடைக்கிதே எண்டு எதிர்பாத்து இருந்திச்சினம்.
     ஆனா காச்சின கஞ்சிய குடிக்கிறதுக்குள்ள, இந்தா நேவிக்காரன் ஊருக்க பக்கத்தில வந்திற்றான் எண்டு சேதி    பரவ, வந்த சனத்தோட நாங்களும் அகதியா கையில கிடைச்சதை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓட்டம் எடுத்தம். வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தையும் அள்ளி கொண்டு போனமாதிரி, நாங்களும் சனத்தோட சனமா அகதியா கிழக்கால வேலணைப் பக்கம்  போக   தொடங்கினம்.
      காச்சின கஞ்சி அவ்வளவும்   குடிக்க ஆளில்லாம அப்பிடியே கிடந்தது.

Tuesday, August 16, 2011

பஸ் டிக்கெட்டும் தோசை கடையும்

         பள்ளி கூடத்தில மகனை இறக்கேக்க "அப்பா ice block வாங்க வேணும். ஒரு டொலர் தாங்கோ" எண்டு கொஞ்சம் அதட்டலாவே  கேட்டான்.  விடிய காலமா இறக்கி விட்டிட்டு வேலைக்கு போற அவசரத்தில நான்.  இந்த நேரம் கேட்டு அடம் பிடிச்சா, கட்டாயம் கிடைக்குமென்று நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறான். இப்ப நிண்டு அவனோட வாக்குவாத பட நேரமில்லை. ஒரு டொலரை எடுத்து நீட்டிற்று,  வாகன நெரிசலில நானும் ஐக்கியமானேன்.  
             
         அந்த நாளில எங்களுக்கு காசு கையில கிடைக்கிறது எண்டது குதிரை கொம்பு மாதிரி.  Pocket money எண்டு ஒண்டு இருக்கு எண்டு எங்களுக்கு அப்ப தெரியாம போச்சு. ஆனா பழைய போத்தல், பித்தளை, அலுமினியம் வாங்கிறவற்ற புண்ணியத்தில அடிக்கடி ஐஸ் பழம் வாங்கி குடிச்சிருவம். அப்பா தோட்டத்தில, அடிச்சு முடிச்ச மருந்து போத்தல் ஐஸ் பழமா மாறி இருக்கும்.  ஒரு மருந்து போத்தலுக்கு ஒரு ஐஸ் பழம்,  யானை சோடா போத்தலுக்கு ரெண்டு பழம், பழைய மூக்கு பேணிக்கு மூண்டு ஐஸ் பழம் எண்டு ஒரு கணக்கே இருக்கு. எங்களுக்க நடக்கிற பண்டமாற்று எல்லாம் ஐஸ்பழ கணக்கிலதான் நடக்கும். 
                   ஒருக்கா நான் என்ர காந்தி தாத்தா படம் போட்ட இந்தியன் முத்திரையை மூண்டு ஐஸ் பழத்துக்கு விக்க, ரவி பதிலுக்கு வீட்ட கிடந்த மூக்கு பேணிக்கு ஆட்டைய போட்டுட்டான். இது தெரியாம நான் மூக்கு பேணிய வீட்ட கொண்டர, அம்மா "அங்க பேணிய தேடி திரியினம். இது என்னெண்டு உன்னட்ட  வந்தது. கொண்டுபோய்  குடுத்திற்று வா" எண்டு  விரட்டினா. கடைசியா முத்திரையும் போய் பேணி கள்ளன் எண்டு பட்டம் வாங்கினது தான் மிச்சம்.        

                              ஆனா பள்ளிகூடத்துக்கு முன்னால இருக்கிற மணி அண்ணையின்ர தோசைக்கடையில இந்த பண்டமாற்று எல்லாம் சரி வராது. ஐம்பது சதத்துக்கு, ஒரு பூவரசம் இலையில ரெண்டு தோசையும் கொஞ்ச சம்பலும் தருவார். தோசை சைஸில பூவரசம் இலையா எண்டு யோசிக்க வேண்டாம்.  பூவரசம் இலை சைஸில தோசை அவ்வளவுதான். மத்தியான நேரம்  தோசைக்கடை நிரம்பி வழியும். இடிச்சு பிடிச்சு முன்னுக்கு போறது கஸ்ரம் எண்டாலும், கையை மட்டும் காசோட முன்னுக்கு நீட்டி ஒருமாதிரி தோசையை வாங்கி போடுவன்.
     தோசை வாங்க வீட்ட காசு வாங்கவும் ஒரு ஐடியா வச்சிருந்தனான். வழமையா பள்ளிகூடத்துக்கு நடந்துதான் போறனாங்க. ஆனா கொஞ்சம் லேற் ஆகிற்ரா பஸ்சில போக அம்மா ஒரு ரூபா தருவா. மினி பஸ்சில போக ஒரு ரூபா.ஆனா CTB பஸ்சில ஏறினா எழுபத்தைந்து சதம்தான். ரெண்டு தரம் லேட்ரா வெளிக்கிட்டா , தோசைக்கு காசு  சேர்த்திரலாம். உந்த CTB பஸ்சால வேற நன்மைகளும் இருக்கு. ஊர்ல இருக்கிற வாழைக்குலை எல்லாம்  கெதியா பழுக்கிறது உதாலதான். நுளம்பு (கொசு) தொல்லையை குறைக்கவும் CTB பஸ் உதவுறது. என்ன இறங்கேக்க கொஞ்சம் தள்ளி நிக்கவேணும். இல்லை எண்டா உங்களுக்கும் புகை அடிச்சு போடும்.
.                           ஒரு ரூபா குடுத்து டிக்கெட் எடுத்திற்று இருபத்தைந்து சதம் மிச்சம் கேட்டா, கண்டக்டருக்கு கோபம் வந்திரும். கேக்காட்டி தர மாட்டார் எண்ட படியால, நச்சரிக்கிறதை தவிர வேற வழி இல்லை. ஒரு நாள் இப்பிடித்தான், மிச்சம் கேட்டதுக்கு டிக்கெட்க்கு பின்னால இருபத்தைந்து எண்டு எழுதி தந்திற்று , இறங்கேக்க  வாங்கு எண்டு  சொல்லிற்று முன்னுக்கு போயிற்றார். நானும் இறங்கிற அவசரத்தில திருப்பி கேக்க மறந்து போனன். மத்தியானம் மணியண்ணையின்ர கடையில, இருபத்தைந்து சதத்தையும் பஸ் டிக்கெட்ஐயும் முன்னுக்கு நீடடினன். ஆனா மணியண்ணை "யாரடா அவன் இருபத்தைந்து எண்டு பேப்பரில ஏழுதி நீட்டுறவன் " எண்டு கையை பிடிச்சிர்றார்.  நிலைமையை விளங்கபடுத்தி கையை விடுவிக்கிறத்துக்குள்ள போதும் போதும் எண்டு போச்சு.

 

Thursday, August 4, 2011

கோட்டு வாசல் மிதியாதே


வேலை முடிஞ்சு வீட்ட வெளிக்கிடேக்க  ஆறு மணி.  சிட்னி வாகன நெரிசலில நெரிபட்டு வீட்ட  போய்  சேர எப்பிடியும்  ஏழு ஏழரை ஆகிரும்.
யாழ்ப்பாணத்தில  குச்சொழுங்கை எல்லாம் சைக்கிள்ள ஓடி திரிஞ்ச பழக்கதில, மெயின் ரோட்டில traffic  எண்டா, ஒழுங்கைக்க காரை திருப்பி, குறுக்கால ஓடி,  கொஞ்சம் கெதியாவே வீட்ட வந்திருவம்..  ஆனா, speed camera , red light camera , stop sign , no right turn , no left turn , bus lane, T lane எண்டு ஆயிரத்தெட்டு தடங்கல்கள்.   மாட்டுப்பட்டா, நூற்று கணக்கில சுளையா காசு போயிரும். என்ர கார் ஓட்டம் கொஞ்சம் அப்பிடி இப்பிடி எண்டாலும், இது வரைக்கும் ஒருக்காலும்  பிடிபடேல்ல.

     வீட்ட வந்து letter box இல விளம்பர குப்பைகளுக்குள்ள கிடந்த பழுப்பு நிற கடிதத்தை உடைச்சு பார்த்தா, No parking இல காரை நிப்பாட்டினதுக்கு 90 டொலர் தண்டம் எண்டு வந்திருந்தது.  அவசரத்துக்கு இஞ்ச  parking  கிடைக்காது. அண்டைக்கும் அப்படித்தான், பெடியன்ர ஸ்கூலுக்கு பக்கத்தில  parking தேடி அலைஞ்சு, கடைசியா no parking  ஓரத்தில இருந்த கொஞ்ச  இடத்தில காரை விட்டிட்டன். ஆனா காரை முழுசா விட முடியேல்ல. காரின்ர பின் பக்கம் கொஞ்சம் no parking குள்ள .  சரி கொஞ்சம் தானே எண்டு park  பண்ணிற்று போய்ரன்.  அதுக்குதான் இண்டைக்கு தண்டம் வந்திருக்கு.  வேலையால வந்த எரிச்சலோட இதுவும் சேர்ந்து, "கோட்டுக்கு போனாலும் பரவாயில்லை. இந்த காசு கட்டுற இல்லை " எண்டு புறு புறுத்துக்கொண்டு வீட்டுக்க போனன்.

   அது ஆயிரத்து தொள்ளயிரத்து எழுபதுகளில் சிறிமாவோ பண்டார நாயக்க நாட்டை ஆண்ட காலம். சனம் ஒரு இறாத்தல் பாணுக்கு, விடிய காலம நாலுமணிக்கு போய் சங்க கடையில வரிசையில நிண்ட காலம். பாணுக்கு மட்டுமில்ல, அரிசிக்கும் பஞ்சம் தான். ஒரு மாவட்டத்தில இருந்து மற்ற மாவட்டத்துக்கு நெல்லு கொண்டு போக ஏலாது. அப்பிடி ஒரு சட்டம். ஆனா எங்க தாத்தா  வன்னியில அவற்ற வயலில விளைஞ்ச நெல்லில ரெண்டு மூட்டையை, ஊருக்கு வரேக்க  போட்டுக்கொண்டு வந்திற்றார். ஆனா வழியில ஆனையிறவுல போலீஸ் மறிச்சு போட்டங்கள். போலீஸ் க்கு காசை கொடுத்து சமாளிச்சிருக்கலாம். இல்ல பேசாம தண்டத்தை கட்டி இருக்கலாம். ஆனா "என்ர வயல்ல விளைஞ்ச நெல்லு. நான் வீட்ட கொண்டு வர ஏலாது எண்டது என்ன ஞாயம்" எண்டு கோட்டுக்கு போயிற்ரார்.சிறிமாவின்ர ஆட்சி, போய் JR ஆட்சி வந்து சிறிமாவோவின்ர citizenship ஐயும் பறிச்சாசு. ஆனா தாத்தாவின்ர கோட் கேஸ் முடிஞ்ச பாடில்ல. 

   நானும் ஒரு நாள், கோட் பார்க்க தாத்தாவோட போனனான். ஊர்காவல்துறை ஒரு அழகான பட்டினம். ஒருபக்கம் படகு துறை, Customs office , போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி. , கடலுக்கு அந்த பக்கம் கரைநகர்ல கடற்படை முகாம், Ceynor  பாக்டரி, கடலுக்கு நடுவில ஒல்லாந்தர் காலத்து கடற்கோட்டை.  இந்தியாவில இருந்து வடக்கன் மாடுகளும், வீடு கட்டுற ஓடும் இங்கை வந்து இறங்கிறது.  மற்ற தீவுகளுக்கு  இஞ்ச இருந்துதான் படகு சேவை தொடங்கிறதால படகுத்துறை எப்பவும் கலகலப்பா இருக்கும். அந்த படகுகளில் ஒன்றுதான் குமுதினி. அந்த படகில்தான் 85 ம் ஆண்டு நடு கடலில வைத்து கடற்படையால், குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் நாற்பதுக்கு மேற்பட்டோர்   குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். மேலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருந்தனர்.

தாத்தாவோட கேஸ்க்கு நாங்கள் நேரத்துக்கே போயிற்றம். விதி படத்தில வாற மாதிரி, வாத, பிரதி வாதங்கள் சூடு பறக்கும்   எண்டு நம்பியிருந்த எனக்கு எமாற்றம்தான். போன உடனேயே இன்னொரு நாளுக்கு கேஸ் பின்போட்டு அனுப்பி விட்டுடினம். கடைசியா  பிற்போட்டு, பிற்போட்டு, தாத்தா இறந்த பிறகும் கோட்டில இருந்து கேசுக்கு ஆஜர் ஆக சொல்லி கடதாசி வாறது நிக்கேல்ல.. 


  இரவு சாப்பாடு முடிய போய் கம்ப்யூட்டரை ON பண்ணினன். "   என்னப்பா வந்ததும் வராததுமா கம்ப்யூட்டருக்கு முன்னால போய் இருக்கிறியள் " எண்டதுக்கு " கொஞ்சம் பொறும் இந்த parking டிக்கெட் ஐ கட்டிபோட்டு வாறன்" எண்டன்.  
     

Wednesday, July 27, 2011

நடுங்கல் கூடம்

  Enginnering faculty  இல இருக்கிற lab களில் ஒன்று Vibration Lab, தமிழில சொல்லுறதெண்டால் நடுங்கல் கூடம் எண்டு சொல்லலாம்.  அங்க தியரி தெரியாமல் practical  class  க்கு போனால் திரத்தி விட்டிருவங்கள். அதனால அங்க practical  class  க்கு போற எல்லாரும் நடுங்கி கொண்டுதான் போறவ. அந்த Lab க்கு
    பொறுப்பா இருக்கிறவர் பேராசிரியர் மகாலிங்கம்.  Vibration இல அவர் செய்த ஆராச்சியை மெச்சி அவருக்கு ஒரு அவருக்கு ஒரு ஜெட் விமான இயந்திரத்தை பரிசாக கொடுத்தவை. அது Enginnering faculty வாசலில அழகா வைக்கபட்டிருக்கு. நாங்கள் அதை பக்கத்தில நிண்டு போட்டோ எடுக்க பாவிக்கிறனாங்கள். 
Engineering faculty க்கு பக்கத்தில இருக்கிற அக்பர் விடுதிக்கு சந்நியாசி மடம் எண்டும் ஒரு பெயர் இருக்கு. இன்ஜினியரிங் படிக்கிற ஆட்களில் 95 வீதம் பெடியள். அவங்களுக்கு எண்டு கட்ட பட்டதுதான் இந்த அக்பர் விடுதி. இங்க தன்கிற பெடியள் காதல் கத்தரிக்காய் எண்டு சுத்தாத அநியாயத்துக்கு "நல்ல"  பெடியள் எண்டதால மற்ற பீட பொண்ணுகள் வைத்த பெயர்தான் சந்நியாசி மடம். 
 பீடம் விட்டு பீடம் போய் காதல் கீதல் பண்ணாட்டியும் எங்கட பீடத்தில ஒரு நிகழ்ச்சி எண்டா பெடியளை பிடிக்கேலாது.
அது பொறியியல் பீடத்தில exhibition  நடந்து கொண்டிருந்த நேரம்.மற்ற campus   சனம், ஸ்கூல் சனம்,ஊர் சனம் எண்டு ஒரே சன கூட்டம். எல்லா பெடியளும் பிஸியா இருந்த நேரம்.Dental  faculty  தமிழ் girls உம் ஒரு gang  ஆக வந்திருந்தினம். 
 அவை  அப்பதான் Tacoma Bridge ஆடுறதைப் பார்த்து ஆடிப்போய், யாரையாவது கடிக்க வேணும் எண்டு கங்கணம் கட்டி  கன்ரினுக்க   இருந்தது தெரியாம, நான் போய் "எங்க இந்த பக்கம், யாரையாவது தேடுறியளோ" எண்டு கதையை தொடக்கினன்.
(Tacoma Bridge ஆடுறதைப் பார்க்க கீழே உள்ள வீடியோ கிளிக் பண்ணவும் ) 


உங்கட வண்டவாளத்தை பாத்திற்று போகலாம் எண்டு வந்தனாங்கள். " என்ன பாலம் இந்த ஆட்டம் ஆடுது", "பாலம் கட்டுற காசை நீங்க சுருட்டினா, பாலம் கட்டேலாது. பாலம் மாதிரி ஒண்டுதான் கட்டேலும்.", " இந்த ஆட்டம் ஆடுது, மகாவலி பாலமும் நீங்களே கட்டினது, அதால திரும்பி போக பயமா இருக்கு ", "உப்பிடி பாலம் கட்டுறதுக்கு தான் நாலு வருசமா கஷ்ரப்பட்டு படிக்கிறியளோ"
"உங்கட பல்லுத்தான் கோணல் எண்டா, கட்டுற கட்டிடங்களுமா கோணல் "

   உண்மையாவே உந்த வீடியோவை போட்டு காட்டுறவன்கள்ள கோபம் கோபமா வந்தது. நல்ல விஷயத்தை போடாட்டியும் பரவாயில்லை. உதுகளை காட்டி எங்கட  மானத்தை வாங்காம இருந்திருக்கலாம்.

  தனிய நிண்டு கடி வாங்கினாலும், என்ர பங்குக்கு திருப்பி குடுக்காம விடேல்ல.  "32  பல்லை பற்றி நாலு வருசமா, 48 மாதமா படிக்கிற ஆக்களுக்கு இது விளங்காது." , "ஆடுற பல்ல புடுங்க எவ்வளவு பந்தா காட்டுரீங்க,    நாங்க எண்டா கையாலேயே புடிங்கி போடுவம்"  எண்டு கொஞ்சம் திருப்பி கொடுத்திற்று இடத்தை காலி பண்ணிரன்.  இந்த கடி பிறகொரு நாள், வினையில வந்து முடிய போகுது எண்டு தெரியாம.

பெடியள் கனபேருக்கு பல்லு பிரச்சினை இருக்கிறதால,   அடிக்கடி dental faculty க்கு பல்லு கிளீன் பண்ண , பல்லு பிடுங்க எண்டு போய் வருவாங்கள். ஓசியில பல்லை காட்ட அதுதான் நல்ல இடம்.  ஒரு நாள் நானும் இருப்புகொள்ளேலாம dental faculty க்கு வெளிக்கிட்டு போயிற்றன்.   
  உண்மையாகவே பல்லு கிளீன் பண்ணுறது கஷ்ரமான வேலைதான். அவ்வளவு நாளா அடைஞ்சு கிடந்த அழுக்கை, மற்ற இடங்களில படாம சுரண்டி கொட்டி அகற்றிறது எண்டது  லேசான வேலை இல்லை.  அதைவிட கஷ்டமான வேலை அவ்வளவு நேரமும் வாயை ஆ வெண்டு திறந்து வைச்சுக்கொண்டு இருக்கிறது.  கிர் கிர் எண்டு சுரண்டுற machine ஒரு பக்கம், சுரண்டி கொட்டுறதை உறிஞ்சிற machine மற்ற பக்கம் எண்டு ரெண்டு machines வாய்க்குள்ள tinkering வேலை செய்யேக்க தலை சும்மாவே கிறுகிறுக்கும். 

  எல்லாம் ஒழுங்காதான் போய்க்கொண்டிருந்தது. ஆனா இடையில ஓரார் வந்து "இவர் தானடி அண்டைக்கு Engineering Exhibition இல பல்லை கையால புடுங்குவன் எண்டு சொன்னவர் " எண்டு அறிமுகம் செய்து வைச்சிற்று போக, 
"பல்லை கையால புடுங்குவீரோ, இரும் உம்மட எல்லா பல்லையும் புடுங்கி கையில தாறன்", " அவற்ற பல்லு இருக்கிற இருப்பில நக்கல் வேற" எண்டு தொடக்கி கிளீன் பண்ணி முடியும் மட்டும் ஒரே கடி.  கடி வாங்கிறதை விட கொடுமை, பல்லு கிளீன் பண்ணேக்க கடி வாங்கிறது. வாயை ஆ வெண்டு திறந்து வைச்சுக்கொண்டு இருக்கவேணும். ஒரு சொல்லும் திருப்பி கதைக்கேலாது.  ஒரு மாதிரி கிளீன் பண்ணி முடிய, இன்னும் உம்மட சூத்தை பல்லை அடைகேல்ல, மூண்டு மாதத்தில திரும்ப வரோணும் எண்டு அனுப்பி விட தலையை ஆட்டி thank  you  சொல்லிற்று அக்பர் விடுதிக்கு நடையை கட்டினன்.
  அதுக்கு பிறகு Dental Faculty க்கு பல்லை காட்டிக்கொண்டு போறேல்ல. 

Monday, June 27, 2011

அன்றும் இன்றும்

விடிய காலம ஆறு மணி. அலாரம் அடிக்க தொடங்கிற்று. கிழமை நாள் எண்டா, குளிரையும் பாக்காம ஆறுமணிக்கு எழும்பி வேலைக்கு ஓட வேணும். சனிக்கிழமையாவது இழுத்து போத்திக்கொண்டு படுப்பம் எண்டா அதுக்கும் இப்ப ஏலாது. மகனுக்கு ஏழரைக்கு football match . இப்ப எழுமபினாதான் அவனையும் எழுப்பி, வெளிக்கிடுத்தி, ground ஐ தேடிப்பிடிச்சு போறதுக்கு சரியா இருக்கும்.
சனிக்கிழமை எண்டாலே எங்கட ஆட்களுக்கு பிஸியான நாள்தான். விடிய காலமா ஐந்து மணிக்கு flemington market எண்டு தொடங்கி, பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், பியானோ கிளாஸ், மிருதங்கம் கிளாஸ், swimming கிளாஸ், தமிழ் கிளாஸ், தேவாரக் கிளாஸ், இதைவிட soccer , கிரிக்கெட், டென்னிஸ் மேட்ச் எண்டு விடிய எழும்பி , அம்மா அப்பா ரெண்டு பேரும் பிள்ளையளை கூட்டிக்கொண்டு ஒவ்வொரு பக்கத்தால
ஓட தொடங்கினா, வீட்ட வர இருட்டீரும்.

எழும்ப மாட்டன் எண்டு அடம் பிடிச்சவனை, ஒருமாதிரி எழுப்பி, அரை குறை தூக்கத்தில இருந்தவனுக்கு, football uniform ஐ போட்டு, boots ஐயும் கால் கட்டுற மட்டையையும் மாட்டி வெளிக்கிடுத்திரதுக்குள்ள போதும் போதும் எண்டு போச்சு.

அந்த நாளில நாங்கள் இப்பிடியா. நாட்டு பிரச்சினையையும் பார்க்காமல், foolball match எண்டா, வீட்டையும் சொல்லாமல் வெளிக்கிட்டு ஓடிருவன். ஒருக்கா யாழ்ப்பாணத்தில tournament . விடிய காலம போன நாங்கள் பொழுதுபடும் மட்டும் வரேல்ல. ஊருக்க பத்து பதினைந்து பெடியளை
ஒண்டா காண இல்லை எண்ட உடனே "எல்லா பெடியளும் சேர்ந்து இயக்கத்துக்கு போட்டாங்கள்" எண்டு சனம் கதை கட்டி விட்டிட்டுது. . அண்டைக்கு இரவு, tournament ஐ வெண்டு, பரிசழிப்பு விழாவில champion cup ஐ வாங்கிகொண்டு கடைசி பஸ்ஸை பிடிச்சி வீட்ட வந்தா, எல்லாருக்கும் நல்ல பூசைதான் கிடைத்தது. எல்லாம் ஒழுங்கா நடந்திருந்தா, நானும் ஒரு நல்ல foolball player ஆ வந்திருப்பன் எண்டு இப்பவும் நினைக்கிறதுண்டு.



கார்ல
ஊர் முழுக்க சுத்தி, ground ஐ தேடி பிடிக்கிறதுக்குள்ள, அவன் திருப்பி நித்திரையாய் போனான். காறை நிப்பாட்டி, வரமாட்டன் எண்டு அடம் பிடிச்சவனை, ground இல இருக்கிற காண்டீனில BBQ sauage வாங்கி தாறன் அது இது எண்டு சொல்லி ஒருமாதிரி ground க்கு இழுத்துக்கொண்டு வந்திற்ரன். Team இல நானும் இன்னொருத்தனும் தான் எங்கட இனம். மிச்ச எல்லாம் வெள்ளையள். வெள்ளையள் எல்லாரும் முதலே வந்திற்றாங்கள். எங்கட மற்ற ஆளை இன்னும் காணேல்ல. கொஞ்ச நேர warmup க்கு பிறகு, match தொடங்கிற்று. பெடியள் விளையாடுறாங்களோ இல்லையோ, அப்பாமார் எதோ premier league match இல பெடியன் விளையாடுரறதா நினைச்சு கத்திக்கொண்டு நிண்டிச்சினம். நானும் என்ர பங்குக்கு அவையோட சேர்ந்து கத்திக்கொண்டு நிண்டன். half time break நேரமும் மகன் BBQ sauage கட்டாயம் வாங்கி தர வேணும் எண்டு ஞாகப படுத்திற்று போனான்.
match முடிஞ்ச உடனே நேர காண்டீனுக்கு ஓடிட்டான்.
BBQ sauage ஐ வாங்கி குடுத்து வீட்ட கூட்டியரேக்க " என்ன football விளையாட பிடிச்சிருக்கா எண்டு கேட்டன். அதுக்கு மகன் நீண்ட யோசினைக்கு பிறகு சொன்னான். " I don't know. but I like the BBQ sauage"